எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கென்யாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதை 24 மணிநேரம் தாமதப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, கலிபோர்னியாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த செயற்கைக்கோளை ஏவுவதை குறித்த நிறுவனம் தாமதப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, ஏப்ரல் 12 ஆம் திகதி வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் செயற்கைக்கோள் மீண்டும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த செயற்கைக்கோளின் முக்கிய பணி விவசாயம், உணவு பாதுகாப்பு, நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றுக்கான தரவுகளை வழங்குவதாகும்.
மேற்படிய செயற்கைக்கோள் கென்ய பொறியாளர்கள் குழுவால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.