புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்ததாகவும் இதுவரை தாம் சோதனை செய்த ஏவுகணைகளில் இது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை என வடகொரியா தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை கலக்கம் அடையச் செய்த குறித்த ஏவுகணைச் சோதனை தமக்கு வெற்றி எனவும் ஏவுகணையானது திரவ எரிபொருள் ஏவுகணைகளை விட வேகமாகவும், கண்டறிந்து இடைமறிக்க கடினமாகவும் இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது சோதனை குறித்து தனது போட்டியாளர்கள் மிகவும் பயமாகவும் கவலையுடனும் இருப்பதாக கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.