விஹாராதிப தேரர் உட்பட மூன்று பிக்குகள் சுமார் மூன்று வருடங்களாக கல்விகற்கும் தேரர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாணவ தேரரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது .தப்பியோடிய மூவரும் இன்று பயாகலை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, களுத்துறை, பயாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து 43 மற்றும் 17 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.