மில்கோ நிறுவனம் தமது தயாரிப்பின் விலைகளை அதிகரிக்க மாட்டாது என்று தெரிவித்துள்ளது.
வேறேதாவது நிறுவனம் பால்மாவின் விலையினை அதிகரிக்குமாயின் அதுதொடர்பாக தங்களது நிறுவனம் கவனத்திற் கொள்ளமாட்டாது என்று அறிவித்துள்ளது.
தமது நிறுவனம் மீண்டும் பால்மா உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதவும். இவை எதிர்வரும் மாதம் 1ம் திகதியில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது.
இதேவேளை, பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமானால் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்குமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாவனையாளர்கள் கூடுதல் விலைக்கு பால்மாவினை கொள்வனவு செய்ய மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
ஒரு கிலோ பால்மா 2 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பைக்கெட்டின் விலை 800 ரூபாவாகும். இவ்வாறான நிலையில் தமது நிறுவனங்களை நடத்துவதில் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.