நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று (25) அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றினுடைய விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தினுடைய அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம் தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றினுடைய விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.
இதன் காரணமாக மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடன் வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வரிசைகளில் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலைமைகள் ஏற்பட்டிருப்பதுடன், இதுவரைக்கும் எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேநேரம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஆதார வைத்தியசாலைக்கு அருகமையில் இருந்து ஆரம்பித்துள்ள எரிவாயு கொள்வனவு காண வரிசை கடற்கரை வீதியில் சென்று சுமார் 200 மீட்டர் தூரம் நீண்டு சென்றிருக்கின்றது இருந்த போதிலும் இன்னும் இந்த இடத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் வந்து சேரவில்லை எனவும் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.