பாராளுமன்ற விவகாரங்கள் அல்ல அரசாங்கத்தின் விடயங்களே தாமதப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தினால் வழங்கப்பட வேண்டிய நியமனங்கள் தாமதமாகியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.