கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் குறித்த வைபவம் இடம்பெற்றது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படும் தொகை 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் அதானி குழுமம், உள்ளூர் பங்குதாரர் ஜான் கீல்ஸ் ஹோல்டிங் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.