இலங்கை மின்சார சபை ஜனவரி மாதம் முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காகிதமில்லா பில் மற்றும் ரசீதுகளை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.
மேலும், மின்சார சபையின் செலவுகள் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீதி விளக்குகளை நிறுவுதல் மற்றும் செயற்படுத்துதல், தற்போதுள்ள ஊழியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய வெளிச் சேவைகள் மற்றும் இலங்கை மின்சார சபையினால் செய்ய முடியாத சேவைகளை உள்ளூராட்சி சபைகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், செலவு குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் புதிய கட்டிட வேலைகளை தற்காலிகமாக நிறுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.