நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு இன்று (08) கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட. போது உத்தரவிடபட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனமொன்றில் 15 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது குறித்தமுறைப்பாட்டினை செய்திருந்தனர்.
அத்தோடு, இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று உண்மைகளை தெரிவிப்பதற்கான திகதியை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரினர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், புகாரை மீண்டும் மே 11ம் திகதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.