விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் 60 வயது பூர்த்தியான அரச ஊழியர்களின் ஓய்வுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
176 மருத்துவ நிபுணர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.