கோவிட்-19 வைரஸ் இனி உலகளாவிய அவசரநிலையாக இருக்காது என்று தான் நம்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேபிசெஸ் தெரிவித்தார்.
மேலும், கோவிட்-19 தொற்றுநோய் 2020 இல் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பசிரித்த போதிலும் அடுத்த ஆண்டு, கோவிட்-19 ஒரு வலுவான நெருக்கடியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தொற்று நோயினால் உலகில் உயிரிழந்த மனித உயிர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அத்தோடு, கோவிட் தடுப்பூசியைப் பெறாதவர்கள் உலகில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், கோவிட் தொற்றுநோயை அகற்ற இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.