இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில்லை என தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் உள்ள தகவல் முற்றிலும் பொய்யானது என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எந்தவொரு தொழிற்சங்கமும் ஊழியர்களுக்கு போனஸ் அல்லது ஊக்குவிப்புகளை வழங்காமல் இருப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதே இலங்கை மின்சார சபையின் நஷ்டத்திற்கு காரணம் என பொறுப்பு அமைச்சர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றமையினை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு தாம் கடுமையாக எதிர்ப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இடுத்தபோதும் இக்கூற்றானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊழலற்ற அரசியல் செயற்பாட்டின் கீழ் அரசியல்வாதிகளின் தவறான தீர்மானங்கள், வஞ்சக வணிகர்கள் மற்றும் சில சந்தர்ப்பவாத நிபுணர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் தீர்மானங்களினால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமது சபைக்கு நஷ்டம் ஏற்படுவதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.