மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மேலும், மின்கட்டண அதிகரிப்பு நாட்டின் பிரஜைகளின் வாழ்வுரிமைக்கு தடையாக இருப்பதாகவும், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் பலர் இது தொடர்பான விசாரணைக்காக ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளதோடு,, தேவைப்பட்டால், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
மேலும், இந்த விசாரணையை விரைந்து முடித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையத்தின் திட்டமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.