அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கு எதிரான குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக, நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி இல்லை என அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், டிரம்ப் மீது 34 கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுவதோடு டொனால்ட் ட்ரம்ப் தனக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வாசித்து அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை டொனால்ட் டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளதோடு நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தவுடன் டொனால்ட் ட்ரம்ப் புளோரிடாவுக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ள டிரம்ப், சட்டமியற்றுபவர்களின் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் அழுத்தத்தின் அடிப்படையிலானவை என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும் இதுபோன்ற செயல்கள் அமெரிக்காவை அவமதிக்கும் செயலாகும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு டொனால்ட் டிரம்ப் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக அறிவித்ததிலிருந்து, அவரது கருத்துக்கணிப்பு மதிப்பீடுகள் உயர்ந்துள்ளன மற்றும் அவரது பிரச்சாரம் $10 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.