2023 ஆண்டுக்கான இந்தியா – இலங்கை கடற்படை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 10வது திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது.
இதன்படி, இப்பயிற்சியானது எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடரும் என இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையிலும் கொழும்பிற்கு வெளியிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த இருதரப்பு கடல்சார் பயிற்சியின் நோக்கம், இரு கடற்படைகளுக்கும் இடையிலான பல ஒழுங்குமுறை கடல்சார் நடவடிக்கைகளில் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை பரிமாறிக்கொள்வது என இலங்கையில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.