ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சோமாலியாவின் தலைநகர் மொகடிஷூவை வந்தடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அவரது விஜயத்தின் நோக்கம் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளதோடு சோமாலியாவில் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை தனது மக்களுடன் இணைந்து செயல்படுவதை இது பெரிதும் எதிர்பார்பாப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபை 8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளதுடன் மேலும் அந்த மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் கடுமையான வானிலை காரணமாக பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சோமாலிய தேசிய தலைவர்களை அன்டோனியோ குட்டரெஸ் சந்திக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.