பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 17 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் தங்களது வழக்கமான பணிக்கு இணைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட வரிகளுக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த தொழில் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர் இதையடுத்து, வேலை நிறுத்தம் தொடர்பாக அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவை எதுவும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக உயர்தர விடைத்தாள் திருத்தத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வேலை நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், உயர்தர விடைத்தாள் திருத்தத்தில் இணைவார்களா? இல்லையா? என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இறுதி முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.