நேற்று (11) பிற்பகல் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த காலி குமரி ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் காலி புகையிரதத்தில் பயணிகளின் நெரிசலில் சிக்கி புகையிரதத்திலிருந்து தவறி விழுந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த இளைஞன் 25 வயதுடைய உடுபில, மிரிஸ்ஸ, வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு புகையிரதத்தில் இருந்து இறங்கும் போது ரயிலில் சிக்கியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.