யட்டியந்தோட்டை, அத்தனகெலய பிரதேசத்தில் களனி ஆற்றில் மூழ்கி காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,.களனி, பட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான நபர், மற்றுமொரு குழுவினருடன் புனித யாத்திரை சென்று திரும்பும் போது, அத்தனகெலய பிரதேசத்தில் களனி ஆற்றுக்கு அருகில் உணவருந்திய பின்னர் கைகளை கழுவச் சென்ற போது களனி ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பொலிஸார் மற்றும் கடற்படையின் உயிர்காக்கும் குழுக்களால் காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.