நேற்று (14) காலை 7 மணி முதல் இன்று (15) காலை 7 மணி வரையான இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் விபத்துக்குள்ளான 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி,அவர்களில் ஐம்பத்தைந்து பேர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதோடு மோதல்கள் காரணமாக 44 பேரும், வீழ்ச்சி காரணமாக 36 பேரும், வீட்டு விபத்துக்கள் காரணமாக 07 பேரும், பட்டாசு விபத்துக்கள் காரணமாக ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.