அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி, பாடசாலை மாணவர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, இறந்தவர்களில் பிரபல அமெரிக்கா கால்பந்து வீரரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிப்பதோடு இந்த ஆண்டின் கடந்த 15 வாரங்களில், அமெரிக்காவில் 163 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், பொதுமக்கள் ஆயுதங்களை கொண்டு செல்வதை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.