சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை – தல்தனை இளைஞர் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் இன்று காலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்படி, கைதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இந்த சீர்திருத்த மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.