சுமார் 3.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மற்றும் ஆறு சந்தேக நபர்களும் இன்று காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இதன்படி, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்து சுமார் 235 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் தெற்கு கடற்கரை திரையில் இருந்து 175 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அரச புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருள் ஏற்றிச் சென்ற கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த 20ஆம் திகதி குடவெல்ல திவார துறைமுகத்தில் இருந்து குறித்த பல நாள் பயணக் கப்பல் புறப்பட்டுள்ளதுடன் இந்த போதைப்பொருள் கையிருப்பு பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, போதைப்பொருள் இருப்பு மற்றும் சந்தேகநபர்கள் அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தை அவதானிப்பதற்காக காலி துறைமுகத்திற்கு வந்திருந்ததோடு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் தனது கருத்தை பின்வருமாறு தெரிவித்தார்.
கடற்படையினரின் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது பழைய திட்டங்களை மாற்றி இலங்கைக்குள் போதைப்பொருட்களை இறக்குமதி செய்ய முயற்சித்து வருவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இருந்து சுமார் 3000 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள், ஐஸ், கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை டற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.