அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, கடந்த சில நாட்களாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் சில வாகன சாரதிகள் நியாயமான காரணமின்றி வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, இது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்ததின்படி அதிவேக வீதியில் எந்தவொரு வாகனமும் தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளானால் அவ்வாறான வாகனங்களை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வீதியின் ஓரமாக நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் கலனிகம நுழைவாயிலுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இரவு பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்படி, சுமார் 24 வாகனங்கள் இவ்வாறு மோதியுள்ளதாகவும் மேலும் வாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளியை வைக்காமல் செலுத்தப்பட்ட வாகனங்களினால் குறித்த விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.