பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்துப் பிரிவுகளிலும் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் அரசாங்கம் அதிகரித்திருந்தது.
மேலும், இவ்வாறு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னர் நாளையுடன் ஒரு வார காலம் நிறைவடையம் நிலையில் அடுத்த வாரம் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா? அல்லது பழைய நிலையில் பேணப்படுமா என்பது இன்று தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.