ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக அவர் தெரிவித்த கருத்து குறித்து விசாரிக்க முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.