கண்டி மற்றும் அக்குரணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் குறித்த பகுதியில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, அக்குறணை பிரதேசத்தில் அசம்பாவிதமொன்று இடம்பெறவுள்ளதாக 118 அவசர இலக்கத்திற்கு நேற்று இரவு அழைப்பு கிடைக்கப்பெற்றதினைத் தொடர்ந்து குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.