ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ உள்ளதே தவிர வேறு எந்த தரப்பினருக்கும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக வெளியான அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று ஆஜராகுமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கேட்டிருந்தது.
எவ்வாறாயினும், அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 7 பக்க சட்ட ஆட்சேபனையை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் சமர்ப்பித்ததாககுறித்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.