ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், காணி சீர்திருத்த ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய நிறுவனங்கள் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பொது வர்த்தக குழுவின் (COP குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ‘எக்ஸ்போர்ட் கிரெடிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ வரும் 25ஆம் திகதி கோப் குழு முன் அழைக்கப்பட்டுள்ளதுடன் நிலச் சீர்திருத்த ஆணையகம் 26 ஆம் திகதி கோப் குழுக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு 21.10.2022 அன்று நடைபெற்ற குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து அங்கு சரிபார்க்கப்படவுள்ளது.
அதோடு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 27ஆம் திகதியும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 28ஆம் திகதியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்பயிற்சி அதிகாரசபை மே 9 ஆம் திகதி குழுவின் முன் அழைக்கப்படவுள்ளதுடன், 23.03.2023 அன்று நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதற்கான முன்னேற்றம்குறித்தும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.