204 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய 172 அபிவிருத்தித் திட்டங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் பூர்த்தி தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இவ்வருடம் 21 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குருவிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும் பெல்மதுல்ல மற்றும் கஹவத்தை அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரம்புக்கன, குளியாப்பிட்டிய, தலாவ, கெக்கிராவ, வெலிமடை, பண்டாரவளை, வெல்லவாய, நாவலப்பிட்டி, குண்டசாலை, கம்பளை, வவுனியா, கிளிநொச்சி, அம்பலாங்கொட, கிரேட்டா மாத்தறை, கட்டான-சீதுவ, ஜா எல, வத்தளை- மாபொல, பஹா ஆகிய கிராம அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டதாகவும் இவ்வருட இறுதிக்குள் நுவரெலியா மற்றும் அறுகம்பேயின் அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்படுவதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்ட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்தோடு, 2021-2022 இரண்டு ஆண்டுகளில், நகர அபிவிருத்தி அதிகார சபை வர்த்தமானி மூலம் 32 அபிவிருத்தி திட்டங்களை வெளியிட்டதோடு கடந்த ஆண்டு மட்டும் 9 வளர்ச்சித் திட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்பட்டி, கந்தளாய், தெஹிவளை-கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹரகம, ஹோமாகம, கஸ்பேவ, நுவரெலியா, தம்புள்ள, கொழும்பு ஆகிய அபிவிருத்தித் திட்டங்களே கடந்த ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகும்.
மேலும்,எந்தவொரு பிரதேசத்திற்கும் நகர அபிவிருத்திப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டால் அதற்குப் பொறுப்பான அமைச்சரினால் அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கடமைப்பட்டுள்ளது.