ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.
இதன்படி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு தம்மையும் பொலிஸ் மா அதிபரையும் தனிப்பட்ட முறையில் பிரதமர் அலுவலகத்திற்கு வரவழைத்து முன்னாள் பிரதமர் கண்டித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, இது தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறுகையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை தடுக்குமாறும் அல்லது தாமதப்படுத்துமாறும் அப்போதைய பிரதமர் தன்னிடம் கூறியதாக தாம் எதுவும் கூறவில்லை எனவும் பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் தனக்கு அறிவுறுத்தியதாக முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.