போதைப்பொருள் வியாபாரியான தெமட்டகொட சமிந்தவின் முக்கிய சீடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
இதன்படி, தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்துடன் தெமட்டகொட சமிந்தவின் மாணவனாகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான சந்தேக நபரின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் அடங்கிய 400 பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.