பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிராம உத்தியோகபூர்வ பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.