அக்குறணை பிரதேசத்தில் தாக்குதல் இடம்பெறும் என 118 அவசர இலக்கத்திற்கு போலி அழைப்பு விடுத்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, இன்று அதிகாலை ஹரிஸ்பத்துவா, பதுகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும், 21 வயதான மௌலவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு கடந்த 18ஆம் திகதி சந்தேக நபர் 118 அவசர இலக்கத்திற்கு போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அதன் பின்னர் அக்குறணை நகரின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்ததோடு அப்பகுதியின் பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.