சிறைச்சாலைத் திணைக்களத்தில் சுமார் 80 பட்டதாரிகள் காவலர்களாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சமூகவியல், மானுடவியல், மனித உரிமைகள் ஆலோசனை போன்ற திருத்தங்கள் மற்றும் புனர்வாழ்வு தொடர்பான பாடங்களில் பட்டம் பெற்ற பின்னணியில் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்த பதவிக்கான கடமைகளை ஆற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சில அதிகாரிகள் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளுடன் டிப்ளமோ மற்றும் மேம்பட்ட டிப்ளமோ படித்துள்ளதாகவும்தங்களுக்கு பணி தரம் உயர்த்தக் கோரி, பல ஆண்டுகளாக சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், தீர்வு காணப்படவில்லை என தெரிவில்லப்படுகின்றது.
மேலும், சில பட்டம் பெற்ற சிறைக் காவலர்கள் மற்ற தனியார் வேலைகள் அல்லது வெளிநாட்டு வேலைகளில் கவனம் செலுத்தும் நிலையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள இந்த ஒழுங்குமுறை அதிகாரிகள் தற்போது சிறைச்சாலைகளுக்கு முன்னால் உள்ள வீதித்தடுப்புகளிலும், காவலரண்களிலும், சிறைவாசல் கதவுகளைத் திறந்து மூடுவதற்கும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, காலியாக உள்ள ஜெயிலர் அல்லது நலன்புரி அலுவலர் பதவிக்கு பதவி உயர்வு என உள்ளக உள்வாங்கலை நடத்துமாறு பட்டதாரி ஒழுங்குமுறை அலுவலர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.