1979ல் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தன அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்த ஆண்டு 20வது முறையாக நடத்த தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதன்படி, இந்த வருட திரைப்பட விழாவிற்கு முழு அனுசரணை வழங்கும் வெண்டோல் ஹெர்பல்ஸ் நிறுவனத்திற்கும் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஊடக அமைச்சின் வளாகத்தில் உள்ள அசிடிசி மண்டபத்தில் அமைச்சர் தலைமையில் அழைக்கப்பட்ட அதிதிகள் முன்னிலையில் இடம்பெற்றது.
மேலும், அங்கு உரையாற்றிய அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, சிங்கள சினிமா வரலாற்றில் மாபெரும் விருது வழங்கும் விழா ஜனாதிபதி விருது வழங்கும் விழா பல வருடங்களாக இடம்பெற்றதாகவும் கடந்த பருவத்தில் நாடு என்ற வகையில் நாம் எதிர்கொண்ட இருண்ட காலத்தை கடந்து, இந்த ஆண்டு விழாவை நடத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும், எமது அரசாங்கம் கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த விழாவை நடத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர்தெரிவித்தார்.