1985 ஆம் ஆண்டினுடைய 21 ஆம் இலக்கத்தினுடைய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்டத்தில் திருத்தத்தினை செய்வதற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிய சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக வரைவு ஆசிரியருக்கு பணிப்புரை வழங்குமாறு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.