இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் (சென்னை, சுச்சிங், பெங்களூர்) ஐந்து நாட்கள் நடைபெறும் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சியாயில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்படி, சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கையின் ஏறக்குறைய நாற்பது நிறுவனங்கள் கலந்துகொண்டதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து வெற்றிகரமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அத்தோடு, நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நாடு என்ற வகையில், இந்தியாவிலும் நம் நாட்டைப் பற்றிய சில தவறான அணுகுமுறைகளை மாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தெற்காசிய பிராந்திய வர்த்தக தூதுவர் சனத் ஜயசூரிய, இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக ஜயபாகு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.