தாம் நேற்றைய பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றியிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான கடன் வசதியை அமுல்படுத்தும் முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதில் தவறில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் 95 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 25 வாக்குகள் மட்டுமே கிடைத்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்திருந்தமை குறிப்பிடதக்கவிடையமாகும்.