வடக்கு சிரியாவில் துருக்கிய உளவுத்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைன் அல் குராஷி கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
இதன்படி, துருக்கிய உளவுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் குராஷி சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, துருக்கிய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் வடக்கு சிரிய நகரமான ஜான்டாரிஸில் இந்த சோதனை நடந்ததாக உள்ளூர் பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தெற்கு சிரியாவில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நடத்திய நடவடிக்கையில் முன்னாள் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து, நவம்பர் 2022ல் அமைப்பின் புதிய தலைவராக அல்-குராஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேவேளை, 2014 இல் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன் அப்போதைய தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி குறித்த பகுதியின் கலீபாவாக அறிவித்திருந்தார்.