போர் நிறுத்தம் அமுலில் இருந்த போதிலும் சூடானின் தலைநகர் கார்ட்டூம் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தலைநகரில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்காக போட்டி இராணுவ குழுக்களை விரட்டியடிப்பதற்காக தாங்கள் தாக்குதல்களை நடத்தியதாக சூடான் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இரு தரப்புக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் வேளையிலேயே இந்த வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, சூடான் அரச இராணுவம் மற்றும் போட்டி இராணுவ குழுக்களுக்கு இடையே பல நாட்களாக நடந்த மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள தோடு போர் மோதல்கள் காரணமாக தலைநகர் கார்ட்டூமில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.