
கொக்குவில் கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கொக்குவில் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று மாலை நீராடச் சென்ற வேளையிலேயே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
மேலும், இருதயபுரம் மற்றும் கருவப்பங்கேணியில் வசிக்கும் 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.