கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, திடீரென இரசாயன, அணு மற்றும் வெடிப்புத் தாக்குதல்கள் ஏற்பட்டால் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான ஒத்திகை விமானப்படை இரசாயன உயிரியல் அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய வைத்தியசாலை வளாகத்தில் நேற்று (10 மே 2023) நடத்தப்பட்டது.
இதன்படி, இப்பயிற்சியின் முதன்மை நோக்கமானது நோயாளிகளை வான்வழி அல்லது தரைவழியாக மிகக் குறுகிய காலத்தில் பாதுகாப்பாகக் கொண்டு சென்று உடனடி சிகிச்சை அளிப்பதாகும்.
மேலும், குறித்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் இரசாயன, உயிரியல், அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நிலேந்திர பெரேரா மற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.