
குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களினை கைது செய்கின்ற புதிய வேலைத்திட்டத்தினை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வாகன சாரதிகளின் சிறுநீர் மாதிரிகளினை பரிசோதித்து அவர்கள் குடிபோதையில் இருக்கிறார்களா, இல்லையா என்பதினை கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதோடு மது மட்டுமின்றி போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியிருப்பது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் 06 வகையான மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இதேவேளை, முன்னதாக வாகன ஓட்டிகளின் சிறுநீர் மாதிரிகள் மருத்துவரின் மேற்பார்வையில்பரிசோதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பொலிஸாரின் நேரடித் தலையீட்டில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.
அத்தோடு, குறித்த இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான உபகரணப் பெட்டிகள் தற்போது காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.