
இலங்கையில் நேற்று மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்படி, கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 72,408 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.