வாக்களிக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அல்லது வயோதிகர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இரகசியத்தன்மையை பேணி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவது குறித்தும் தமது ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.