வரி அறவீட்டில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை துரிதப்படுத்தவும், வரி செலுத்துதலை முறைப்படுத்தவும் புதிய வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ருவன்வெல்லவில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த புதிய வேலைத்திட்டம் அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.
அதோடு, வரி முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் பல வருடங்களாக தடைகளை எதிர்நோக்கி வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலத்திரனியல் முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வரி தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு தனி நீதிமன்றம் இல்லாத காரணத்தால், பெரும் காலதாமதம் ஏற்படுவதால், வரி விவகாரங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.