இலங்கையில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்காக மேலும் ஆயிரம் மாணவர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இதன்படி, ஆரம்ப சுகாதார பராமரிப்பு அமைப்பை (PSSP) வலுப்படுத்தும் உலக வங்கி திட்டத்தில் இருந்து இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கப்படுவதோடு பயிற்சி காலத்தில் மாணவர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி கொடுப்பனவாக பணம் வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்காலத்தில் இலங்கையில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.