ஜூன் மாதம் முதல் பதினைந்து நாட்களில் வீட்டிலிருந்து கடவுச்சீட்டை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய முறை அமுல்படுத்தப்படுவதன் மூலம் இலங்கை மக்கள் மூன்று நாட்களில் அல்லது ஒரு பதினைந்து நாட்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும்தெரிவித்துள்ளார்.