வாகன ஆவணங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளதோடு சந்தேக நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த முப்பத்திரண்டு வயதுடையவர் எனவும் சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சந்தேக நபர் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு அந்த வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதோடு இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.